வெள்ளி, 23 ஜனவரி, 2009

முற்பிறவி

உயிரின் முற்பிறவியா? உடம்பின் முற்பிறவியா?
உடம்பின் முற்பிறவி பெற்றோர்.
உயிரின் முற்பிறவி ஆருக்குத் தெரியும்?
உயிரே தெரியவில்லை. உயிரின் வினை அடுத்த பிறவிக்குத் தொடரும் என்கின்றனர்.
வினை தொடரும் என்பதை எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை.
நல்லது செய்ய வேண்டும். அதனால் எல்லாரும் இன்புற வேண்டும் -என்கிற நல்லெண்ணத்தில் கூறப்படும் தத்துவங்கள் பலவற்றுள் இதுவும் ஒன்று.
தத்துவம் தத்துப் பிள்ளை. உண்மை சொந்தப் பிள்ளை. முற்பிறவிக் கொள்கை தத்துப் பிள்ளை.