திங்கள், 12 அக்டோபர், 2009

'sivayanama' 'சிவாயநம' மந்திரம்


'sivayanama' 'சிவாயநம' மந்திரம்
சிவம்+ஆயம்+நம
மரம்+அடி=மராஅடி,(மராடி) என்பது போலச் 'சிவாயம்' என்பதன் புணர்ச்சி அமைந்துள்ளது.
ஆய(ம்)+நம=ஆய நம - 'ந' முன் 'ம்' தோன்றாமல் மறைவது இயல்பு.
நம = நம்+அ
என் தலை = எனது தலை = என்+அது தலை. (இதில் 'அது' என்பது ஒருமை)
என கைகள் = என்+அ கைகள் (இதில் 'அ' என்பது பன்மை)
அதுபோல
'நம' (நம்+அ) 'அ' பன்மை
இந்த வகையில் 'நம்முடைய ஆயம் சிவம்' என்பதே 'நமசிவாய' என்பதன் பொருள்.
சிவம் = செம்மை = fair
Ours is fair-men society
We only are responsible for good or evil.
This is the meaning of 'sivayanama'
This is the 'theme' of 'sivayanama'

வியாழன், 8 அக்டோபர், 2009

'om namachivaya' மந்திரம்


'நமச்சிவாய' = 'நமச்சிவாயம்' = நம்+அச்சு+இவ்+ஆயம்
ஆயம் = நம்மோடு பழகும் ஆயத்தார்
நமக்கு அச்சு யார்?
நம் உயிரரைக் காப்பவர், உடலுக்கு உணவு வழங்குபவர், மனத்தைச் செம்மைப்படுத்துபவர், அறிவை வளர்ப்பவர் - எல்லாமே நம்மோடு பழகுபவர்கள்தானே!
அவர்கள்தானே நம் அச்சு.
இந்த மந்திரத்தைச் சொல்லுவோம். கடைப்பிடிப்போம்.
ஓம் = நான்+நீ+அவன்
ஒப்புநோக்குக - 'செய்வோம்' = 'செய்+வ்+ஓம்'
'ஓம் நமச்சிவாய'
Our axle is our 'society'
'om namachivaya'
View
Nice imagination and introspection. I wish everyone will look at the word this way - targeted towards the society rather than god!-Anban

அறம் என்றால் என்ன?


ஆறு ஓடுவது போல உலக மக்களை அரவணைத்துக் கொண்டு ஓடுவது அறம். ஆறு மண்ணின் தன்மையை வாங்கிக் கொள்கிறது. மண்ணுக்கு உதவுகிறது. உயிரினங்களுக்கு உணவாகிறது. இப்படிச் சமூகத்துக்கு உதவுவதுதான் அறம்.
உழைப்பையும், உடைமையையும் பங்குபோட்டு(அறுத்து) வழங்குவதுதான் அறம்.