திங்கள், 30 மார்ச், 2009

குவளை - மலர் 4 - kuvalai - water lily.




குவளைப் பூவை ஆம்பல் பூவோடு ஒத்திட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆம்பல் பூ படம் 2-ல் தரப்பட்டுள்ளது.


செங்குவளை, கருங்குவளை, நீலம் என்றெல்லாம் இது நிறம் பற்றிப் பேசப்படும்

ஆம்பல் - மலர் 2 - aambal - water lily






ஆம்பல் சற்று கூர்மையான இதழ்களைக் கொண்டது. குவளை கூர்மை இல்லாது வளைந்த இதழ்களைக் கொண்டது. மலர் -4 குவளை படம் பார்க்க
நீர் அளவே ஆகுமாம் நீராம்பல் - ஔவையார். நீர் உயர்ந்தால் ஆம்பல் உயர்ந்து மிதக்கும். நீர் தாழ்ந்தால் ஆம்பல் தாழ்ந்து மிதக்கும். அதுபோல மனம் உயர்ந்தால் மகிழ்வு உயரும். மனம் தாழ்ந்தால் மகிழ்வு குறையும்.
குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு - ஔவையார். கொட்டி, ஆம்பல், நெய்தல் ஆகிய பூக்கள் குளத்தில் நீர் இருந்தால் வளரும். நீர் இல்லாதபோது தானும் காய்ந்து நீர் வந்ததும் மீண்டும் தழைத்துக் கொள்ளும். அதுபோல உறவினர் செல்வம் உள்ளபோதும் இல்லாதபோதும் சேர்ந்தே வாழவேண்டும்.





ஞாயிறு, 29 மார்ச், 2009

கோடல் - மலர் 62 - Kodal - white glory lily.


மலர் -1 காந்தள் மலரோடு இதனை ஒப்பிட்டுக்கொள்வோம்.

காந்தள் - மலர் 1 - Kanthal - Kaanthal - Glory-Lilly.




"ஒண் செங்காந்தள்' என்று சிறப்பிக்கப் பட்டுள்ள இந்தக் கார்த்திகைப் பூவை முருகனுக்கு உகந்தது என்பர்.


இம்மலருக்கு ஆறு இதழ். முருகனுக்கு ஆறு தலை. குறிஞ்சிநிலத் தெய்வம் முருகன்.


விண்மீன் கார்த்திகை உருவட்டத்தில் ஆறு மீன்கள்.


'வெண்காந்தள்' (கோடல் - மலர் 62) இதன் வகைகளில் ஒன்று.

மலர்கள் Flowers

இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலப் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான குறிஞ்சிப் பாட்டில் (பாடல் அடி 62 முதல் 96) 99 பூக்களின் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மழை பெய்து நின்றதும் பருவ மகளிர் இவற்றுடன் பிற பூக்களையும் பறித்துவந்து பாறைமேல் குவித்து விளையாடி மகிழ்கின்றனர். பாடலில் உள்ளபடி பூக்களுக்கு வரிசை எண் தரப்பட்டுப் படத்துடன் இத் தளத்தில் உலவ விடப்பட்டுள்ளன. பாடலைப் பாடியவர் கபிலர்.

புதன், 18 மார்ச், 2009

mind rope மனக்கயிறு


அன்புக் கயிறு அணைக்கும்
ஆசைக் கயிறு பிணிக்கும்
இன்பக் கயிறு இறுக்கும்
ஈசன் கயிறு உருக்கும்

உறவுக் கயிறு உலவும்
உதவிக் கயிறு நீளும்
நிறைவுக் கயிறே வீடாம்
நேயக் கயிறே வாழ்வாம்

வியாழன், 12 மார்ச், 2009

கபிலர் - Kabilar

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய தொகுப்புகளில் கிடைத்துச் சேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் 2381. அவற்றில் கபிலரால் பாடப்பட்ட பாடல்கள் 235. மொத்தப் பாடல்களில் இது எவ்வளவு?

செவ்வாய், 3 மார்ச், 2009

அவன் - நான்


அவன் - நான் (அவன் = இறைவன் = He)
தந்தை உயிரணுவைத் தாய் வயிற்றில் சேர்த்தான்.
தாயின் உயிரணு அதனுடன் இணைந்து வளர்ந்தது.
பிறந்துள்ளேன்.
உயிரணு = DNA
உறங்கும் வானம் அவன்
உலவும் நிலம், நீர், காற்று, தீ அவள்
அவன் உயிர் அவள் சத்தியோடு (சத்தோடு) சேர்ந்து 'நான்' இருக்கிறேன்

திங்கள், 2 மார்ச், 2009





கண்ணன் - 1
கண்ணில் இருப்பவன் கண்ணன். யார் கண்ணில்? என் கண்ணில். உன் கண்ணில் இருக்கும் கண்ணன் யாரோ! எனக்குத் தெரியவில்லை. நீ கண்ணன் படம் போட்டால் உன் கண்ணில் இருப்பவனைத் தானே போடுவாய். நீ சிலை செய்தால் உன் கண்ணில் இருப்பவனைத் தானே செதுக்குவாய். எல்லாருடைய கண்ணிலும் ஒரே கண்ணன் இருக்கின்றான் என்றால் இந்த உருவங்கள் எல்லாமே ஒன்றாக இருக்க வேண்டுமே!

என் மகன் வெளியூரில் இருக்கிறான். அவன் என் கண்ணில் இருக்கிறான். கண் = கருத்து

ஞாயிறு, 1 மார்ச், 2009

புகழ்


புகழ் என்பது ஒருவருக்குப் பிறர் தரும் வெளிச்சம். வள்ளுவர் புகழை 'ஒளி' என்கிறார்.
கண்ணாடியில் முகம் பார்க்கிறோம். நம் முகத்தில் வெளிச்சம் பட்டால் முகம் நன்றாகத் தெரியும். கண்ணாடியில் மட்டும் வெளிச்சம் பட்டால் நம் முகம் தெரியுமா? காசு கொடுத்து வாங்கும் புகழ் கண்ணாடியில் வீசும் வெளிச்சம் போன்றது. புகழ் நன்னிலத்தில் பெய்யும் மழை போன்றது. ஓடிவிடும். ஊறவும் செய்யும்.