புதன், 9 ஜூன், 2010

நால்வகை ஊழிஎண் four shelves of numerical forms

'ஐ அம் பல் என வரூஉம் இறுதி அல்பெயர் எண்' - தொல்காப்பியம் 394

'பாழென காலென அரையென ஒன்றென
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆறென ஏழென எட்டெனத் தொண்டென
நால்வகை ஊழியெண் - பரிபாடல் 3(79)

பாழ் - ஒருவகை ஊழி
கால், அரை ... போன்றவை ஒருவகை ஊழி
ஒன்று, இரண்டு ... போன்றவை ஒருவகை ஊழி
தாமரை, வெள்ளம், ஆம்பல் போன்ற அல்பெயர் எண்ணிக்கை போன்றவை ஒருவகை ஊழி
'நிரைகளிறு ஒழுகிய நிரைய வெள்ளம்' - பதிற்றுப்பத்து 15
யானையின் எண்ணிக்கை வெள்ளம் என்க

இப்படி நால்வகை ஊழி

'ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார். குறள் 989
மேலே சொன்ன 4 ஊழிகள்.

வாரம் week

உழவர்களிளிடையே 'வாரம்' என்னும் சொல் பெரிதும் பயன்படுகிறது.
நிலத்துக்காரர் விதையும் உரமும் தருவார். தொழிலாளி பயிரிடுவார். விளைச்சலை ஆளுக்குப் பாதியாகப் பங்குபோட்டு எடுத்துக்கொள்வர். இதற்குத்தான் வாரம் என்று பெயர்.

மாதத்தில் வளர்பிரை நாட்கள் 14. இதில் வாரம் 7 நாள்தானே.
தேய்பிரை நாட்கள் 14. இதில் வாரம் 7 நாள்தானே.

ஒருசிலர் 'வாரம்' என்னும் சொல்லை வடசொல் என ஒதுக்குவது ஏனோ

சனி, 5 ஜூன், 2010

'ஓம்' - அறிவியல் பார்வை

'போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம்' - வள்ளலார்
'ஓசை ஒளியெலாம் ஆனாய் போற்றி'
'ஓம்' - இது பிரணவ மந்திரம்
'ஓம்' - Big Bang
ஓசையை அலைநீளத்தாலும், அழுத்த அதிர்வுகளாலும் அறிவியல் அளந்து பார்க்கிறது.
Hertz / Hz என்பது அதன் அலகு (அளவுக்குறியீடு).
மனிதர்கள் 20 முதல் 20,000 ஒலியலகுகள் இருந்தால்தான் ஓசையைக் கேட்க முடியும். 20-க்குக் குறைந்தால் மனிதர்களால் கேட்க முடியாது. சாதாரண மனிதன் 16,000 அலகுக்கு மேற்பட்ட ஒலியைக் கேட்க முடியாது. குழந்தை 20,000 அலகு வரையில் கேட்கும் திறம் பெற்றிருக்கிறது.
நாய் 35,000 அலகு வரையில் கேட்க முடியும்.
எலி 1,00,000 அலகு வரையில் கேட்க முடியும்.
யானை, திமிங்கலம் போன்றவை 20-க்குக் குறைந்த அலகுள்ள ஒலிகளை எழுப்பவும் கேட்கவும் முடியும். குறைந்த அலகுள்ள ஒலிகள் அதிக தூரம் செல்லும். இதனால் அவை அதிதொலைவிலுள்ள தன் இனத்தோடு பேசிக்கொள்ள முடியும்.
யானை 'ஓம்' என்று பிளிறுகிறது. எனவே இது போன்ற பிரணவ ஒலி பேரண்டம் முழுவதும் பரவக்கூடிய குற்றலை ஒலி infra-sound என உணர்ந்துகொள்ளலாம்.
Big Bang ஒலியின் molecular vibration நம்மால் கேட்க முடியாத 'ஓம்'

வெள்ளி, 21 மே, 2010

செருக்கு

விரும்பத்தகாத செருக்கு
யான் எனது எனது என்னும் செருக்கு அறுக்கப்பட வேண்டும் - குறள் - 346
தீவினை என்னும் செருக்குக் கொள்ள விழுமியார் அஞ்சுவர் - குறள் - 201

செருக்கும், சினமும், சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமிதம் நீர்த்து - குறள் - 431
வெண்மை எனப்படுவது ஒண்மை உடையம் யாம் என்னும் செருக்கு - குறள் - 844

விரும்பத் தகுந்த செருக்கு
உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு - குறள் 598
வேளாண்மை என்னும் என்னும் செருக்கு - குறள் - 613
பொருள், செருநர் செருக்கு அறுக்கும் எஃகு - குறள் - 759
வாழுநம் என்னும் செருக்கு - குறள் - 1193
பகைவர்கண் பட்ட செருக்கு - குறள் - 878
படைச்செருக்கு - குறள் - அதிகாரம் - 78

செவ்வாய், 11 மே, 2010

ஞால்


ஞால், ஞான்றது, ஞாற்சி என்னும் சொல் வடிவங்கள் தொல்காப்பிய உரையில் வருகின்றன.
ஞால் = தொங்கு
ஞான்றது = தொங்கிற்று
ஞாற்சி = காதில் தொங்கும் தொங்கட்டான்.
மண்ஞாட்சி = மண் குணுக்கு
பொன்ஞாட்சி = பொன்வளையம்

ஞாலம் என்னும் சொல்லை ஆராயும்போது தமிழர் உலகம் தொங்குகிறது என்று உணர்ந்திருந்தனர் என்பது புலனாகும்.

உலவுவது உலகம் என்பதும் தமிழரின் அக்கால அறிவியல் நோக்காகந் தென்படுகிறது.

ஞாயிறு, 9 மே, 2010

சுமை

எருமை மாடு சும்பபதுபோல்
எல்லா ரையும்நாம் சுமக்கின்றோம்
அருமை உதவி அதற்காக
அடிமைப் பட்டுக் கிடப்பதுவோ

பொதுவன் அடிகள்

சனி, 17 ஏப்ரல், 2010

நாம் கடவுள்

கடவுளை 'அடைவது' என்கிற சமயக் கோட்பாட்டைவிட, கடவுளாக 'ஆவது' என்கிற அத்வைதத்தை உலகம் வரவேற்கும்.

- அருட்செல்வர் டாக்டர் நா மகாலிங்கம் - தமிழர் பண்டாடு - மாதஇதழ் - ஏப்ரல் 2010

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

பெண் - பேண்


கண் - காண் - காண்பது
பெண் - பேண் - பேணுபவர்

உண் - ஊண் - உண்ணும் உணவு
பண் - பாண் - பாடுபவர்
மண் - மாண் - தாங்கித் தழையவைக்கும் மாண்பினை உடையது

மின் - மீன் - வானிலும் நீரிலும் மின்னுவது

பெண்ணின் பெருமை


பெண்ணின் பெருமை எதற்காக
பேசித் திரிவோம் அதற்காக
கண்கள் இரண்டில் எதுபெரிது
காணும் போது சிறப்பெய்தும்

உயிரா உடலா எதுமுந்தி
ஒன்றிக் கிடக்கும் வான்வெளியில்
வெயிலா நிழலா எதுவேண்டும்
விலக்கிப் பார்ப்ப தெப்படியோ

நீயா நானா யார்பெரியர்
நினைத்துப் பார்க்க முடியாது
நீயில் லாமல் நானில்லை
நெஞ்சுக் குள்ளே நாமிருவர்

வியாழன், 25 மார்ச், 2010

ஆதன், பூதன்


ஆதன் = உயிர் (organic)
பூதன் = மெய் (inorganic)
ஆகாயம்
ஆ = உயிர்
காயம் = மெய்
'து' = பற்றுக்கோடு
துப்பார்க்குத் துப்பாய
ஆ = ஆதல்
பூ = பூத்தல்
ஆகாயத்தில் உள்ள காயம் பூதங்களாகப் பூக்கிறது.
'மலர் மிசை ஏகினான்' = மலரும் நம் உடம்பில் உயிராகவும், மலரும் நம் அறிவில் எண்ணமாகிய குணத்தானாகவும் சென்றுகொண்டிருப்பவன்.
ஆ + து + அன்
ஆ (< ஆன்(மா) < ஆம் ) + தந்தை = ஆந்தை
பூ (< பூன் < பூம்) + தந்தை = பூந்தை

கோடல் - மலர் 62 - Kodal - white glory lily.


இது கோடல் மலர்

இது காந்தள் மலர்

புதன், 24 மார்ச், 2010

நாதம்

Pearl - image: Wikipedia

நா + து + அம் = நாதம்
நா = நாக்கு
து = உணவு
நாக்கு கொள்ளும் உணவு சோறு
நாக்கு தரும் உணவு நாதம்
இப்படி 'நாதம்' என்பது தூய தமிழ்ச்சொல் என்று எல்லாருக்கும் தெரிகிறது
இதனை ஆரியம் தனதாக்கிக்கொண்ட உண்மையைத்தான் எண்ணிப் பார்க்க நமக்கு நேரமில்லை

வேதம்


உடலில் படும் ஊமைக் காயத்தை ஆற்ற வேது கொடுக்கிறோம்
உள்ளத்தில் படும் ஊமைக் காயத்தை ஆற்ற இறைவன் பெயரைச் சொல்லிக்கொள்கிறோம்.
இறைவன் பெயர் உள்ளத்துக்கு வேது
இந்த வேதுதான் வேதம்
வேதம் என்னும் தூய தமிழ்ச்சொல்லை ஆரியம் என்பது விந்தை

செவ்வாய், 23 மார்ச், 2010

ஓம் நமோ நாராயணாய



See full size image
நாராயணனை ஆழ்வார்கள் நாரணன் என்கின்றனர்.
(ம்) நாராயணாய(ம்) நா .... நார், அ(ண்)ணன் என்னும் 2 சொறகளின் சேர்க்கையே நாராயணன்.
நார் என்னும் தமிழ்ச்சொல் அன்பைக் குறிக்கும்.
ஒப்புநோக்குக - திருக்குறள் - 958
நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்.
நாரணன் நமக்கிடையே அன்பாய் விளங்கும் அண்ணன் அல்லவா
நார், ஆய், அணன்
அன்பு ஆகி நம்மோடு அண்மி உள்ளவன்
நா அணரி அண்ணம் ஒற்றல் வருடல் - என்னும்போது 'அண்' என்னும் சொல் இப்பொருளைத் தருவதை உணர்ந்துகொள்ளலாம்.
நாமெல்லாம் நாராயனின் ஆயத்தார், அன்பு ஆகி விளங்கும் ஆயத்தார்
இந்த விளக்கங்களால் நாராயண மந்திரம் தமிழ்வழி மந்திரம் என்பதை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

புதன், 24 பிப்ரவரி, 2010

த்வைதம், அ-த்வைதம், விசிட்டா-தவைதம்

ஓர்மை = அ-த்வைதம் = ஆதி
இறைநிலை இறைந்து கிடத்தல்
உறங்குகிறான். உயிரோட்டம் செயல்படுகிறது. உணர்வோட்டம் செயல்படவில்லை.

இருமை = த்வைதம் = ஆதிபகவு
இறைநிலை ஆற்றலாக இறைகிறது.
நடக்கிறான். உணர்வோட்டமும் செயல்படுகிறது.

மும்மை = விசிட்டா-தவைதம் = அறிவு, மலர்ச்சி, உணர்வு முதலாவை
இறைநிலை தன் பகவோடு இறைகிறது.
உண்கிறான். உணவு இறைவனது மற்றொரு பகவு

ஓர்மைநிலை உணர்வுக்கு எட்டாத ஒன்றாகையால் வள்ளுவர் இருமை, மும்மை நிலைகளாக இறைவனைக் காட்டுகிறார்.

புதன், 20 ஜனவரி, 2010

கா


கா என்றால் காடு
கா என்றால் காப்பாற்று
நாம் வெளிவிடும் கரிக்காற்றை வாங்கிக்கொண்டு நமக்கு உயிர்க்காற்றைத் தருவது மரமடர்ந்த காடு.
உணவு தந்தது காடு.
நம்மைக் காப்பாற்றுவது காடு
நாம் காப்பாற்ற வேண்டியது காடு
அதனால்தான் காட்டைக் 'கா' என்றனர்

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

நம்தெய்வம்

எழுதிக் குவிக்கும் வல்லவரே
எழுத்தைப் படிக்கும் நல்லவரே
உழுது வாழும் உழைப்பால்தான்
உண்டு மகிழ்வீர் மறவாதீர்.

பொங்கல் உழவர் திருநாளா
பொங்கல் உழவர்த் தொழுநாளா
(=பொங்கல் உழவரைத் தொழும் நாளா)
எங்கும் இன்பம் எதனாலே
ஏரோர் தந்த கொடையாலே

சேற்றில் காலை வைப்பவரால்
தேசப் பசிநோய் நீங்கிவிடும்
சோற்றில் கையை வைத்திடலாம்
தொழுவோம் உழவே நம்தெய்வம்

வெள்ளி, 1 ஜனவரி, 2010

Fentacy - மாயை - உயர்வு, தாழ்வு

2 இது பெரியதா? அல்லது சிறியதா?
1 சொல்கிறது - 2 பெரியது.
3 சொல்கிறது - 2 சிறியது.
உலகியலும் அபபடித்தான்.
வேலனை இருவர் பார்க்கின்றனர்
கந்தன் சொல்கிறான் - வேலன் பெரியவன்.
முருகன் சொல்கிறான் - வேலன் சிறியவன்.
இப்போது நீங்கள் சொல்லுங்கள் - வேலன் பெரியவனா? இல்லை சிறியவனா?
எல்லாம் மனம் செயயும் மாயை.
உலகில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனறு யாரும் இல்லை.