சனி, 17 ஜனவரி, 2009

எண்குணத்தான் -திருக்குறள் (9)

ஆதிபகவன் \வாலறிவன் \மலர்மிசை ஏகினான் \வேண்டுதல் வேண்டாமை இலான் \இறைவன் \பொறிவாயில் ஐந்து அவித்தான் \தனக்கு உவமை இல்லாதான் \அறவாழி அந்தணன் ஆகிய எட்டும் இறைவனின் எட்டு குணங்கள். இவற்றை முறையே -உயிருடல் \அறிவு \எண்ணம் \ஆசை \அரவணைக்கும் தலைமை \மனத்தாலும் புரிந்துகொள்ள முடியாத தன்மை \ஒப்புமை காட்டிப் பரிய வைக்க முடியாத தன்மை \அறத்தைச் சுழற்றி ஆள்தல் -என்னும் எட்டு குணங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை எட்டு குணங்கள் என்றோ, எண்ணிப் பார்க்கத் தக்க குணங்கள் என்றோ, இயல்பாகப் பாயும் எளிய குணங்கள் என்றோ நாம் எடுத்துக்கொள்ளலாம்.
ଧ எண் சேர்ந்த நெஞ்சு ଧ - குறள் ௯௧0
ଧ எண் பதத்தால் எய்துதல் ଧ குறள் ௯௯௧
ஆகியவற்றை ଧஎண்ଧ என்பதற்குத் துணையாகக் கொள்ள வேண்டும்.