ஞாயிறு, 3 மே, 2009

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் (குறள் 140)



உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார் (குறள் 140) ஒட்ட ஒழுகல் என்றால் என்ன? தண்ணீர் ஒட்டிக்கொண்டிருக்கும். ஒழுகும். ஒட்டிக்கொண்டே ஒழுகும். மண்ணின் தன்மையை ஒட்டிக்கொண்டே உருண்டோடும். உருண்டோடும்போது மண்ணின் தன்மையை விட்டுவிட்டுத் தூய்மையாகிவிடும். உலகம் அப்படியும் இப்படியுமாகத்தான் இருக்கும். எப்படியிருந்தாலும் அதனோடு நாம் தண்ணீரைப் போல ஒட்டிக்கொண்டே ஒழுக வேண்டும். வாழ்க்கை உருண்டோடும் ஓட்டத்தில் நம்மை நாமே தூய்மையாக்கிக்கொள்ள வேண்டும். இதற்கு 'நீர்மை'(=ஒழுங்கு) என்று பெயர். உலகம் என்பதற்கு 'உயர்ந்தோர்' என்று பொருள் கூறுவர். உயர்ந்தோர் யார்? யாராலும் சொல்ல முடியாது.