திங்கள், 19 ஜனவரி, 2009

பாயிரம் (திருக்குறள்)

இறை, மழை, நீத்தார், அறம் என்னும் நான்கினைக் கூறுவது திருக்குறள் பாயிரம். இவற்றைத் -தெரியாமல் ஆட்டிப் படைக்கும் இறை, -தெரிந்து ஆட்டிப் படைக்கும் மழை, -வாழ்ந்து காட்டும் நீத்தார், -வாழவேண்டிய அறநெறி என்று பாகுபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டும்.
பாயிரம் என்னும் சொல் சங்க நூல்களில் இல்லை.பழமொழி, பெருங்கதை ஆகிய நூல்களில் காணப்படுபவையே காலத்தால் முந்தியவை. தொல்காப்பியத்தில் பனம்பாரனார் பாடலைப் பாயிரம் என்கிறோம். திருக்குறள் தொகுப்பைப் பிரித்துக் காட்டும் திருவள்ளுவ மாலை முதல் 4 அதிகாரங்களைப் பாயிரம் என்று குறிப்பிடுகிறது.நன்னூல் இலக்கணத்தில் பாயிரம் விரிவாகப் பேசப்படுகிறது. நூலின் தொகுப்பு முன்னுரையைப் பாயிரம் என்கிறோம்.