ஞாயிறு, 21 ஜூன், 2009

மனம் Mind


கைகால்கள் இல்லை
ஊனமாகாது உலகளாவும்
மனம்

இது கவிமுகில் என்பவரின் Haiku கவிதை. மனம் வானளாவப் பறக்கும் என்பார்கள். வானத்தில் நமக்குத் தெரிந்தவை மீன்களும் கோள்களும் போன்றவையே. அவைகளும் தனித்தனி உலகங்கள். மனம் அவற்றையும் அளாவும். அவற்றில் இல்லாதவற்றையும் கற்பனை செய்யும் - இப்படிக் கவிதைச் செய்தி மேலும் விரியும்.

நூல் 'மூவடிச் சித்திரங்கள்' 'Feathered Esloons' பக்கம் 34

கருத்துகள் இல்லை: