ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

பெண்ணின் பெருமை


பெண்ணின் பெருமை எதற்காக
பேசித் திரிவோம் அதற்காக
கண்கள் இரண்டில் எதுபெரிது
காணும் போது சிறப்பெய்தும்

உயிரா உடலா எதுமுந்தி
ஒன்றிக் கிடக்கும் வான்வெளியில்
வெயிலா நிழலா எதுவேண்டும்
விலக்கிப் பார்ப்ப தெப்படியோ

நீயா நானா யார்பெரியர்
நினைத்துப் பார்க்க முடியாது
நீயில் லாமல் நானில்லை
நெஞ்சுக் குள்ளே நாமிருவர்

கருத்துகள் இல்லை: