


கலைமகள் படைப்பாளியின் நாவில் இருக்கிறாள் என்கிறார்கள். என்ன பொருள்?
அலைமகள் திருமாலின் நெஞ்சில் இருக்கிறாள் என்கிறார்கள். என்ன பொருள்?
மலைமகள் சிவபெருமானின் பாதியாக இருக்கிறாள் என்கிறார்கள். என்ன பொருள்?
கல்வி பயில்கிறோம். ஆசிரியரின் நாக்குத்தானே நமக்குச் சொல்லித் தருகிறது.
உடைமையைத்தானே திரு என்கிறோம். அன்புடைமை, அருளுடைமை, அறிவுடைமை, பொருளுடைமை, என்பதெல்லாம் என்ன? மனத்தின் தன்மைதானே.
உயிரும் உடலும் ஒன்றி உறங்குவது சிவம். அவை எழுச்சி பெறும்போது சத்து சத்தியாக (சக்தியாக)வெளிப்படுகிறது. இப்படி நாம் சிவம் பாதி, சத்தி பாதி என்னும் நிலையில்தானே இருக்கிறோம். தத்துவம் புரிந்திருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக