வியாழன், 12 பிப்ரவரி, 2009

இறந்தார் (திருக்குறள் 22, 42, 145, 146, 152, 159, 283, 310, 432, 476, 531, 885, 977, 1138, 1157, 1254, 1275,


திருக்குறள் இறத்தல் என்னும் சொல்லோடு தொடர்புடைய சொற்களை 17 இடங்களில் கையாண்டுள்ளது.

இறந்தார் யார்?

தொல்காப்பியம் தெளிவு படுத்முகிறது.

'காமம் சான்ற கடைகோட் காலை
ஏமம் சான்ற தக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (கற்பியல் 51)

முதிர்ந்த வயதில் இளையோருக்கு வழிகாட்டியாய் நல்லனவற்றைத் பயிற்றுவித்துக் கொண்டு மனைவி மக்களோடு சேர்ந்து வாழ்பவர்.

இவர்களுக்கு இல் வாழ்வான் துணை.
இவர்களின் இன்னாச்சொல் நோற்கப்பட வேண்டும்.
இவர்கள் சினம் துறந்து இறந்தவர்

இறந்தார்க்கு இல்வாழ்வான் துணை -42,
இறந்தார் வாய் இன்னாச்சொல் நோற்க -159
இறந்தார் இறந்தார் அனையர் -310

வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று -22 (செத்தவர்)

இறப்பே புரிந்த தொழில் -977 (வரம்பு கடத்தல்)
இல் இறப்பான் -145, 146, (வரம்பு கடத்தல்)
இறப்பினைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் -152 (வரம்பு கடத்தல்)
அளவு இறந்து -283 (வரம்பு கடத்தல்)
மாண்பு இறந்த மானம் -432 (வரம்பு கடத்தல்)
நுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் -476 (வரம்பு கடத்தல்)
இறந்த வெகுளி -531 (வரம்பு கடத்தல்)
இறன் முறை -885 (வரம்பு கடத்தல்)
மறை இறந்து மன்று படும் -1138, 1254 (வரம்பு கடத்தல்)
இறை இறவாநின்ற வளை -1157 (வரம்பு கடத்தல்)
தொடி செய்து இறந்த கள்ளம் -1275 (வரம்பு கடத்தல்)

கருத்துகள் இல்லை: