திங்கள், 30 மார்ச், 2009

ஆம்பல் - மலர் 2 - aambal - water lily






ஆம்பல் சற்று கூர்மையான இதழ்களைக் கொண்டது. குவளை கூர்மை இல்லாது வளைந்த இதழ்களைக் கொண்டது. மலர் -4 குவளை படம் பார்க்க
நீர் அளவே ஆகுமாம் நீராம்பல் - ஔவையார். நீர் உயர்ந்தால் ஆம்பல் உயர்ந்து மிதக்கும். நீர் தாழ்ந்தால் ஆம்பல் தாழ்ந்து மிதக்கும். அதுபோல மனம் உயர்ந்தால் மகிழ்வு உயரும். மனம் தாழ்ந்தால் மகிழ்வு குறையும்.
குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு - ஔவையார். கொட்டி, ஆம்பல், நெய்தல் ஆகிய பூக்கள் குளத்தில் நீர் இருந்தால் வளரும். நீர் இல்லாதபோது தானும் காய்ந்து நீர் வந்ததும் மீண்டும் தழைத்துக் கொள்ளும். அதுபோல உறவினர் செல்வம் உள்ளபோதும் இல்லாதபோதும் சேர்ந்தே வாழவேண்டும்.





கருத்துகள் இல்லை: