வியாழன், 16 ஏப்ரல், 2009

தவம் என்றால் என்ன




தவ் < தவம்\ 'தவ்' என்றால் என்ன? திருவள்ளுவர் விளக்குகிறார். இருள் கௌவிக்கொண்டது. பசி கௌவிக்கொண்டது. -என்றெல்லாம் சொல்லும்போது கௌவுதல் என்றால் என்ன என்பது விளங்கும். அவனும் அவளும் காமத்தால் இணைந்திருந்தனர். இதனை ஊரார் 'ஒரு மாதிரியாக'ப் பேசினர். இது 'கௌவை'. இந்தக் கௌவை 'இன்னும் இன்னும் வேண்டும். அது இன்பம்' என்று அவர்கள் கருதுகின்றனர். (குறள் 1143) இந்தக் கௌவை காம இன்பத்தைக் கௌவிக் கொண்டிருக்கிறது. அது இல்லாவிட்டால் காமம் 'தவ்' என்னும் -என்கிறது மற்றொரு குறள். 'கௌவையால் கௌவிது காமம் அதுஇன்றேல் தவ்-என்னும் தன்மை இழந்து' (1144) தவ்- என்றால் என்ன? உப்புச் சப்பில்லா வாழ்க்கை. இந்தத் 'தவ்' என்னும் சொல்லிலிருந்து வந்ததுதான் 'தவம்'. தவம் என்பது உப்புச் சப்பில்லா வாழ்க்கை.

கருத்துகள் இல்லை: